Saturday, June 02, 2007

ஏர்கலப்பை பாகம் 1

கிராமம் ஒன்றிலே ஒருவன் தன் உழவைக்கொண்டு தம் வாழ்வை ஓட்டி வந்தான். அவன் மிகவும் துன்பத்திலே உழன்று கொண்டு இருந்தான். மற்றவர்கள் போலவே.

ஒரு நாள் அவன் மீது புத்தரின் கருணைப் பார்வை விழ்ந்தது. அவன் சந்நியாசியாகிவிட்டான். அவன் சந்நியாசத்தை ஏற்க்கும்போது தான் பயன்படுத்தி வந்த ஏர்கலப்பையை ஆசிரம வாசலிலேயே ஒரு மரக்கிளையில் தொங்கவிட்ட்லிருந்தான். கடந்த கால சம்பந்தங்களை விட்டு விடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதில் எவ்வித பயனும் இல்லாவிட்டாலும் சரியே.அவ்வாறு பயனில்லாத விஷயங்களை விட்டு விடுவதென்பது தான் மிகவும் கடினமானதும்கூட.

சந்நியாசத்தை ஏற்ற பிறகு சிலநாட்கள் வரை அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அதன் பிறகு மீண்டும் துயரம் தொற்றிக் கொண்டது. மனதின் சுபாவமே இது போலத்தான், இரண்டுகெட்டான் நிலை, ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை. இந்த துயர் நிலையிலிருந்து ஒரு வைராக்கியம் கிளம்பி நின்றது. அவன் சிந்திக்க துவங்கினான்-இந்நிலையைவிட இல்லற நிலையே மேலாக இருந்ததே, ஒரு அலாதியான தொல்லையை விலை கொடுத்து வாங்கி விட்டது போலாகி விட்டதே, இந்த சந்நியாஸ் நிலையிலே என்னதான் பயனிருக்கிறது ?

இந்த விரகத்தால் பீடிக்கப்பட்ட அவன் வைராக்கிய நிலையை நோக்கி நடந்து அந்த ஏர்கலப்பையை எடுத்து மீண்டும் இல்லறத்தை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அம்மரக்கிளையை நெருங்கி நின்றான்……

தொடரும்


( இந்த கதை மிகவும் அருமையான செய்திகளை கொண்டது , ஓஷோவின் விளக்கத்துடன் )

நன்றி ( தமிழ் ஓஷோ டைம்ஸ்- மே 1999)

No comments: