Monday, July 23, 2007

முல்லாவின் ஆராய்ச்சி

முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது....

வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் " ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான் , நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் " என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்


-ஓஷோ

Thursday, July 19, 2007

ஓரு நாள் தியான முகாம் - கோவை





ஓஷோ ஒரு நாள் தியான முகாம்- கோவை



இடம் :- CD பவுண்டேஷன், செட்டிபாளையம் , கோவை


நாள் :- 28 ஜீலை மாலை 4 மணி முதல் 29 ஜீலை மாலை 4 மணி வரை



நடத்துபவர் :- மா ஞான் ரிக்தா



கட்டணம்: ரூ 250/- மட்டும்

உணவு மற்றும் தஙகும் வசதியுடன் ( பொது)



தொடர்புக்கு : ஆனந் நிரூப், -93677-97878, ஞான் அனீக் 98422-98820








Sunday, July 15, 2007

meditation programme at tirupur

21 DAYS MEDITATION PROGRAMME AT TIRUPUR

VENUE : Natraj complex, II floor, Easwaran Koil Street, Tirupur

DATE : 16-07-07 to 05-08-07

TIME : 6 am to 7 am , 4 pm to 6 pm

CONTACT : 94437-16669,
98430-42522,
93451-85349.


Friday, July 13, 2007

அடக்க முடியாது

ஒரு சமயம் முல்லா, தம்முடைய அரச சபை அனுபவங்களைச் சீடர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்,
இளவரசரின் முன்னால் , வலிமையும், இளமையும் பெற்ற , முரட்டுத்தனமும்,முன் கோபமும் உடைய குதிரை ஒன்று நிறுத்தப்பட்டது. அக்குதிரையின் மேல் ஏறிச்சவாரி செய்யமுயன்ற வீரர்கள் எல்லாம் கீலே விழுந்து, காயமடைந்தனர்.

இதைக் கண்டு நான் சும்மா இருப்பேனா ? எனவே அவ்வீரர்களிடம் சென்று ,” இளைஞர்களே! உங்களால் இந்த குதிரையை அடக்க முடியாது! இதன் மேல் ஒரு நொடி கூட உட்கார முடியாது. தள்ளிச் செல்லுங்கள் “ என்று சொன்னேன்.

அதைக் கேட்டு வீரர்கள் விலகி நின்றனர். இளவரசர் என்னைப் பார்த்தார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் புன்னகை தவழ எழுந்த நான், குதிரையின் அருகில் சென்றேன் என்று சொல்லிய முல்லா சற்று நிறுத்தினார்.

முல்லா கூறியதை எல்லாம் கேட்ட சீடர்களில் ஒருவன் , “ பிறகு என்ன நடந்தது ? “ என்று கேட்டான்.

அதற்க்கு முல்லா , “ நான் சொன்னது மிகச் சரியாக இருந்தது ! என்னாலும் ஒரு நொடிகூட குதிரையின் மேல் உட்கார முடியவில்லை “ என்று பெருமையாக சொன்னார்

காமம் – சூத்திரம்3-பாகம் 2 - நீ ஒரு பெண்ணொடு புணரும் போது….

உன் துணையாக இருக்கும் நபர் வெரும் கதவுதான்- போது, பிரபஞ்சத்தோடு புண்ர்கிறாய். முழுமைக்குள் செல்வதற்க்கான கதவே அடுத்தவர், நீ இருக்கும் வேகத்தில் அதை உண்ர்வதில்லை , நீங்கள் ஆழ்ந்த சங்கமத்தில் மணிக்கண்க்காக அரவணிப்பில் இருந்தால், நீ மற்றவரை மறந்து விடுவா-அந்த நபர் இந்த பிரபஞ்சத்தின் நீட்டிப்பே என்பதை உணர்வாய்.

ஒரு முறை அறிந்து கொண்டால், நீ இந்த நுட்பத்தைப் பயன் படுத்தலாம், நீ தனியாக இதைப் பயன் படுத்தலாம். நீ தனியாக இதைப் பயன் படுத்தும் போது உண்க்கு ஏராளமான சுதந்திரம் கிடைக்கிறது. மற்றவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. உண்மையில் இந்த பிரபஞ்சமே மற்றவராக மாறி விடுவதால்தான் இது நிகழ்கிறது-இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடித்து, ஒருவர், இடைவிடாது பிரபஞ்சத்தோடு சங்கமிக்க முடியும்.

வேறு பரிமாணங்களிலும் நீ இதை செய்யலாம் . காலையில் நடக்கும் போது இதை செய்யலாம். அப்போது நீ காற்றுடன் , உதிக்கின்ற சூரியனுடன், ஆகாயத்துடன் , மரங்களுடன் தொடர்ப் கொள்கிறாய். இரவில் நட்சத்திரங்கலிருந்து தொடங்கி நீ இதை செய்யலாம். ஒரு முறை நீ இது எப்படி நிகழ்கிறது என்று அறிந்து இந்த அண்டத்தோடு கலவியில் ஈடுபட முடியும்.

ஆனால் மனிதர்களோடு துவங்குவது நல்லது – ஏனென்றால் அவர்கள்தான் உனக்கு அருகாமையில் உள்ளார்கள். ஆனால் அவர்களைத் தவிர்த்து விடலாம். நேரடியாக நீ கதவை தாண்டி சென்று விட முடியும்.

சங்கமத்தை நினைக்கும் போதெ மாற்றம் நிகழும்”

நீ மாற்றமடைவாய் . புதிய மனிதனாகி விடுவாய் .

தந்திரா காமத்தை ஒரு வாகனமாகப் பயன் படுத்துகிறது. அதுதான் சக்தி , அது உன்னை மாற்றி , கடந்து சென்றடையும் பல நிலைகளைக் கொடுக்கிறது.
( தொடரும் )
ஓஷோ : தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

Thursday, July 12, 2007

முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம்

முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம் அவரது மனைவி கேட்டாள்
“ முல்லா உனக்கு த் தெரியுமா ? பெளர்ணமி இரவில் கடல்கள் கொந்தளிக்கும் , மனித மனம் பைத்தியகாரத்தனம்மாக வேலை செய்யும் ! கேள்விப் பட்டிருக்கிறாயா ? “

முல்லா “ நான் கேள்விப்பட்டதில்லை , ஆனால் உன்னை முதல் முதலாக காதலிக்கிறேன் என்று சொன்னது பெளர்ணமி இரவில் தான்” என்றார்

-ஓஷோ

காமம் சூத்திரம் 3 – பகுதி 1 (அண்டமே துணையாகிவிடும்…. )

மூன்றாவது சூத்திரம்.

அரவணிப்பில்லாவிட்டாலும் சங்கமத்தை நினைவில் கொள்வதே மாற்றம் விளைவிக்கும்,


ஒரு முறை நீ அறிந்து கொண்டால், பிறகு துணைகூட தேவையில்லை , நீ வெறுமனே அந்த செயலை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனுட் செல்ல முடியும். ஆனால் முதலில் நீ அதை உணர்ந்துருக்க வேண்டும். இது கொஞ்சம் கடினமானது ஆனாலும் இது நிகழ்ந்திருக்கிறது. அது நிகழாதவரை நீ யாரையாவது சார்ந்து இருக்க வேண்டும் . பல்வேறு காரண்ங்களால் இது நிகழ்கிறது.

உனக்கு அந்த உணர்வு வரப்பெற்றிருதிருக்குமானால் நீ மறைந்து ஒரு அதிரும் அலையாக நீ மாறிவிட்ட கணத்தை நீ அறிந்திருந்தால், உன் துணையோடு உண்டாக்கிக் கொண்ட அந்த வட்டத்தால் உன் துணை இல்லாது போய் விடுவதையும் நீ உணர முடியும், நீ தான் இருக்கிறாய், உன் துணை இல்லை- அவள் இல்லை-அல்லது நீ தான் இருக்கிறாய் அவன் இல்லை.

ஒருமை உனக்குள் நிகழ்வதால் துணை மறைந்துவிடுகிறது. இந்த அனுபவம் பெண்களுக்கு நிகழ்வது எளிது- அவர்கள் கண்களை மூடியபடி கலவியில் ஈடுபடுகிறார்கள்,

இந்த நுணுக்கத்தில் நீ கண்களை மூடியிருந்ததல் நலம் பயக்கும். அப்பொழுதுதான் உள்ளே ஒரு வட்டத்தினை முழுமையாக உணரமுடியும் . இதை நினைவில் கொள் கண்களை மூடிக்கொண்டு, படுத்துக்கொள்-உன் துணை அங்கே இருப்பதைப்போல உணர், உன் உடல் அதிர்ந்து அலைகளாக மாறத் தொடங்கும்.

அதை அனுமதி , அடுத்தவர் அங்கேயிலலை என்பதை முற்றிலும் மறந்துவிடு , அடுத்தவர் இருப்பதைப் போல இயங்கு, துவக்கத்தில் தான் அடுத்தவர் இருப்பதை போல உண்ரவேண்டிவிடும்- ஒரு முறை அறிந்து கொண்டால் , உண்மையிலே அடுத்தவர் அங்கே இருப்பதாக மாறிவிடும் . நீ கலவியில் இயங்குவதைப் போல இயங்கு உன் காதலியோடு எப்படியேல்லாம் செய்ய நினைத்தாயோ , அப்படியெல்லாம் செய், கத்து , இயங்கு , குதி, அந்த வட்டம் , மாய வட்டம், அங்கே இருக்கும், அந்த வட்டம் உருவாவதை நீ உணர முடியும், இந்த வட்டம் , ஆணோடோ , அல்லது பெணோடோ உருவாக்கப்படுவதல்ல , நீ பெண்ணாக இருந்தால் இந்த அண்டமே ஆனாகி விடுகிறது. ஆணாக இருந்தால் அண்டமே பெண்ணாகி விடுகிறது. நீ இந்த பிரபஞசத்தோடு ஆழமான சங்கமத்தில் இருப்பாய்-வாயிலாக இருந்த அடுத்தவர் அங்கே இருக்கத் தேவையில்லை

( தொடரும் …. )

ஓஷோ : தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

Wednesday, July 11, 2007

முல்லா

"முல்லா மிகவும் புத்திசாலி " என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.
ஒரு நாள் அரச சபை கூடியபோது, அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, முல்லா, " உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும்; பொய்யாயின், உங்களைத் தூக்கிலிடுவேன் , எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள் " என்றார்.

"முல்லா உண்மையைக் கூறினாலும் இறந்து விடுவார்; பொய்யைக் கூறினாலும் இறந்துவிடுவார். ஆதலால்; முல்லா இன்று தொலைந்தார்" என்று சபையோர் வருந்தினர்கள்.

முல்லா மன்னரைப் பார்த்துப் அமைதியுடன், " மன்னரே , நீங்கள் என்னைத் தூக்கில் போடிவீர்கள் " என்று சொன்னார்.

முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.

முல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்படவேண்டும் , அவ்வாறு வெட்டப்பட்டால், அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல், தூக்கில் போட வேண்டும்.
முல்லா கூறியது பொய்யாயின் முல்லாவத்தூக்கில் போடவேண்டும்
அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் , உண்மையை கூறினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையயை வெட்டவேண்டும்.

எனவே, புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை மன்னர் பாராட்டினார், சபையோர் மகிழ்ந்தனர்

முல்லாவின் வேடிக்கை கதைகள்

காமம்- சூத்திரம்-2 பகுதி2-சும்மா அதிருதில்லே

அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்நதால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது; உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது; உடலின் ஒவ்வொரு அண்வும் பங்கேற்கிறது.ஒவொரு அணுவும் செக்ஸ் அணுதான் .

நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன, அந்த இரண்டு காம உயிரணுக்கள் உன் உடல் முழுவதும் பரவி கிடக்கின்றன. உன் உடலை நீ காதலியுடன் சேர்ந்து இருக்கும்போது அதிரச்செய்தால், உன் உடலுக்குள் ஒவ்வொரு உயிரணுவும் அதன் எதிர்மறையான அணுவுடன் சந்திக்கிறது. இந்த அதிர்வு அதை காட்டுகிறது. இது விலங்கு தன்மை உடையதாகத் தோன்றும் . ஆனால் , மனிதனும் விலங்குதான்-ஏதும் தவறு இல்லை.

இந்த இரண்டாவது சூத்திரம் சொல்கிறது. “ இப்படிபட்ட அரவணைப்பில் உன் புலன்கள் இலைகளைப் போல அதிர்ந்தால்…..

ஒரு பெருங்காற்று வீசி மரத்தை அசைக்கின்றது. வேர்கள் கூட அசைகின்றன- ஒவொவொரு இலையும் அசைகிறது– ஒரு பெரிய மரத்தைப் போல ; ஒரு பெருங்காற்று வீசுகிறது, காமம் ஒரு பெருங்காற்று ; பெரும் சக்தி உன் வழியாகப் போகிறது-அதிர் ; அசை ; உன் உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் ஆட விடு, அதிர விடு , அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் சந்திக்க முடியும் . அந்த சந்த்திப்பு மனதளவில் நிகழ்வதாக இருக்காது- உங்களின் உடற் சக்திகளின் சந்திப்பாக இருக்கும்.

இந்த அதிர்வின் உட்செல் , அதிரும் போது பார்வையாளனாக இருக்காதே; மனம்தான் பார்வையாளனாக இருக்கிறது. அந்த அதிர்வாக மாறிவிடு , உன் உடல் அதிர்கிறது என்பதல்ல- நீயே அதிர்வாக மாறி உன் முழுமையும் ஈடுபட வேண்டும் . அப்போழுது நீங்கள் இரண்டு உடல்களாக , இரண்டு மனங்களாக இருக்க மாட்டீர்கள், முதலில் இரண்டு அதிரும் சக்திகள் பிறகு இரண்டும் மறைந்து ஒரு வட்டம் மட்டுமே எஞை நிற்கும்.

இந்த வட்டத்துள் என்ன நிகழும் ? ஒன்று நீ இருந்த இருத்தலின் சக்தியின் ஒரு அங்கமாகி விடுவாய்- ஒரு சமுதாய மனமாக இல்லாமல் இயற்க்கை சக்தியின் அங்கம்மாகி விடுவாய். நீ இந்த அண்டத்தின் ஒரு பகுதியாகிவிடுவாய். இந்தக் கணம் ஒரு பெரும் படைப்பு ஆகும். மனம் மறைந்து விடுகிறது –பிரிவுகள் இல்லாது போய் விடுகின்றன்-நீங்கள் ஒன்றாகி விட்டீர்கள் .

இதுதான் அத்வைதம்-பிரிவில்லாத தன்மை . இந்தப் பிரிவின்மையை நிங்கள் உணராவிட்டால் எல்லா அத்வைததத்துவங்களும் பயனற்றதாகிவிடும் . ஒரு முறை இந்தப் பிரிவு படாத ஒருமையின் கணத்தை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டால் , பிறகுதான் நீ உபநிடதங்களை , ஞானிகளை , அவர்கள் கூறுகிற அண்டத்தின் ஒருமையை, முழுமையை உண்ர்ந்து கொள்ள முடியும். நீ உலகத்திலிருந்து வேறு அல்ல, அதற்க்கு வித்தியாசமானவன் அல்ல இந்த அண்டம் முழுவதும் உன் வீடு.
இந்த அண்டம் என் வீடாகி விட்டது என்னும் எண்ணத்தால் உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். பிறகு கவலைகள் , போராட்டம், பிளவு ஏதுமில்லாமல் போய்விடும். லாத்சூ இதை தாவோ என்கிறார் . சங்கரர் அத்வைதம் என்கிறார். நீ உனக்கு இஷ்டப்பட்ட வார்த்தையை த் தேர்ந்தேடுத்து கொள்ளலாம், ஆனால் இதை ஆழமான அன்பின் அரவணைப்பில் உண்ர்வது எளிது. உயிரோட்டமுள்ளவனாக அதிர், அந்த அதிர்வாக மாறு

( மூன்றாவது சூத்திரம் அடுத்த பதிப்பில் )
-ஓஷோ;- தந்திரா ஆன்மிகம் பாலுண்ர்வும்

Friday, July 06, 2007

ஓஷோ : முன்று நாள் தியான முகாம் ( கொடைக்கானல் )

3 Days Meditation Camp
At kodaikanal & Pine forest

Conducted by :

SWAMI MOHAN BHARATHI , Osho Commune International,Pune

Date :

From 16th Auguest (3pm ) to 19th Augest 2007
( room key shall be issued on 16 th august from 9 am itself )
Venue:

S.V.International,
Convert Road,Kodaikanal,
Phone : 04542-243816,244182

Bus Stop – Lake Stop, ( walkable distance from Lake )

Contribution:

Rs 2,100 per person( Two person in a room)
Inclusive of food & dx,Dbl,Room attached bath with Cold& Hot water facility.

PROGRAMME

A Variety of Music Guided , Passive and Active Meditations. OSHO Audio and Video
Discourses .

BON FIRE DANCING MEDITATION

Will be held on 18th Aug 2007 after 8.00p.m

THINGS TO BRING
Participants are requested to bring woolen clothing like Shawls , Sweaters, Socks,Jerkin etc

BOOKING CENTERS

CHENNAI : Sw.Gyan Nimitto , 99416-29573,
COIMBATORE : N.Arul Mozhi, 98422-47671,
DINDIGUL: Sw.Jeevan Naval, 94430-23461,
MADURAI:chinnasam Swamy, 98430-62086,0452-2620867,
TIRUPUR : Sw.Prem Sirat,92451-42799,98422-65345,
TRICHY: Sw.Mohan Bharathy,94434-24065,
ULUNDURPET: M.P.Choria, 94432-32465


LAUGH *LOVE* MEDITATE* DANCE * CELEBRATE *

காமம் சூத்திரம் -2 அசைவில் உட்செல்- பகுதி 1

“ இப்படிப்பட்ட அரவனைப்பைல் உன் புலன்கள் அனைத்தும் இலைப்போல அசைக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் “

இப்படிப்பட்ட அரவனைப்பில் – இப்படிபட்ட ஆழமான பரிமாற்றத்தால் உன் காதலன் அல்ல்து காதலியோடு உன் புலன்கள் இலைகளைப் போல ஆட்டுவிக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல்

நாம் பயமடந்து விடுகிறோம் – கலவியில் இயங்கும் போது நம் உடல்களை அதன் விருப்பத்திற்க்கேற்ப இயங்க அனுமதிப்பதில்லை, ஏனேன்றால் உடலை அதன் விருப்பப்பட்ய் இயங்க அனுமதிப்பதில்லை. ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதித்தால் கலவி உடல் முழுவதும் பரவிவிடும். அது பிறப்புறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கும் போது நீ அதை கட்டுபடுத்த முடியும். ஆனால் உடல் முழுதும் பரவி விட்டால் நீ அதை கட்டுபடுத்த முடியாது.நீ நடுங்க ஆரம்பித்துவிடுவாய் ; நீ கத்த ஆரம்பித்துவிடுவாய்; உன் உடல் கட்டுபாட்டை எடுத்துக் கொண்டு விட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.

நம் இயக்கத்தை நாம் அடக்கி வைக்கிறோம் – பெண்களின் அசைவுகளை உலகம் முழுதும் கட்டுபடுத்தி வைத்துள்ளது. அவர்கள் உயிரற்ற உடல்களைப்போல இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை இப்படி அடக்கி வத்துள்ளார்கள் ?

பயம்- இருக்கிறது- ஒரு முறை பெண்ணின் உடல் ஆட்கொண்டுவிட்டால், ஒரு ஆணால் அவளை திருப்தி செய்ய முடியாது . ஏனெனில் பெண்களுக்கு சங்கிலித்தொடாரான உச்ச நிலை உள்ளது. ஆண் ஒரு முறைதான் உச்ச நிலைக்குச் செல்ல முடியும். ஆனால் பெண்ணால் பல முறை தொடர்ந்து உச்சநிலை ஏய்தமுடியும் , பல உச்சநிலைகளை அடைந்த பெண்களைப்பற்றி செய்திகள் வந்துள்ளன.எந்த ஒரு பெண்ணும் முன்று முறை தொடர்ந்து உச்ச நிலை அடைய முடியும் . ஆனால் , ஒரு ஆனால் ஒரு முறைதான் முடியும் . ஆனால் ஒரு ஆணால் ஒரு முறைதான் முடியும் . என்வே ஒரு மனிதனின் உச்சநிலை பெண்ணைத் தூண்டி விட்டுவிட்டால் பிறகு கஷ்டமாகிவிடும் . பிறகு சமாளிப்பது எப்படி ?
உடனே அவளுக்கு வேறு ஒரு ஆண் தேவைப்படுகிறான்; ஆனால் குழுப்புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுக்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம். எனவே பெண்களை அடக்கி வைப்பதே மேல் . எண்பதிலிருந்து , தொண்ணூறு சதவிகிதப் பெண்கள்Uக்கு உச்சக்கட்டம் என்பது என்னவென்றே தெரியாது. அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கண்வனை திருப்தி செய்ய முடியும் இதெல்லாம் வேறு விஷயம். ஆனால் , அவர்கள் நிறைவடைவதில்லை. எனவே , பெண்களிடத்து வெருப்பையும் விரக்தியையும் , கசப்பையும் உலகம் முழுவதும் காண முடிகிறது. எனெறால் அதற்க்குக் காரணம் இதுதான் அடிப்படை த் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.

(தொடர்ச்சி அடுத்த பதிப்பில் )

ஓஷோ : - தந்திரா ஆன்மீகமும் பாலுண்ர்வும்

Thursday, July 05, 2007

நீடித்த புணர்ச்சி - காமம் சூத்திரம் 1 பகுதி 3

முதலில் காமத்தை, கலவியை எங்கோ செல்வதற்கான வழியாக நினைக்காதே; அதை ஒரு பாதையாக எடுத்துக் கொள்ளாதே; அது தான் முடிவு.

இரண்டாவது எதிர்காலத்தைப் பற்றி நினைக்காதே; கலவியின் துவக்கத்தில் நீ நிகழ் காலத்தில் இருக்கமுடியவில்லையென்றால் , பிறகு எப்பொழுதும் உன்னால் நிகழ்காலத்தில் இருக்க முடியாமல் போய்விடும். கலவியின் இயற்க்கைத் தன்மையே உன்னை நிகழ்காலத்துக்குள் வீசியெறிவதுதான்.

நிகழ் காலத்தில் இரு. இரண்டு உடல்கள் ஆத்மாக்கள் சந்தித்து ஒன்றாக கரையும் உருகும், இனையும் சந்திப்பை அனுபவி. எங்கோ போகிறோம் என்பதை மறந்துவிடு. எங்கும் போகாமல் இந்த கண்த்திலேயே இருந்து கரை . அன்பும் கதகதப்பும் நீ கரைவதற்க்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அத்னால்தான் அன்பு இல்லையென்றால் கலவி வேகமானதாகி விடுகிறது. நீ மற்றவரைப் பயன்படுத்துகிறாய் அவர்கள் ஒரு பாதையாகி விடுகிறார்கள். மற்றவர்கள் உன்னை பயன்படுத்துகிறார். இருவரும் ஒருவர ஒருவர் ஏமாற்றுகிறீர்கள்.

ஆனால் அன்பிருந்தால் இருவரும் ஒன்றாக கலந்துவிட முடியும். இந்தக்கலவி, பல புதிய உள்ளோளியைக் கொடுக்க முடியும் , செயலை முடித்துவிடும் வேகத்தில் நீ இல்லாவிட்டால், இந்த செயல் நாளடைவில் இறைத் தன்மை பெற்றதாகிவிடும்,காம உருப்புகள் கூட ஒன்றுக்குள் ஒன்றாக கரைந்துவிடும்.பல மணி நேரங்கள் நீங்கள் சேர்ந்து இருக்கும்போது ஒரு ஆழமான அமைதியான பரிமாற்றம் நிகழ்கிறது. நேரம் செல்லச் செல்ல இந்த ஒருமை மேலும் மேலும் ஆழமாகச் செல்லும் ஆனால் சிந்திக்காதே. ஒன்றாகி அந்த கண்த்தில் இரு. அது சமாதி நிலையாக , பேரானந்தமாக மாறி விடுகிறது. இதை நீ அறிந்து கொண்டால், உண்ர்ந்து தெளிந்துவிட்டால் உன் காமம் நிறைந்த மனம் காமம் அற்றாதாகி விடுகிறது. மிகுந்த ஆழமான பிரம்மச்சரியம் பிறக்கிறது.

பிரம்மச்சாரியாக இருக்க வேண்டுமென்றால் பெண்களை/ஆண்களைப் பார்க்க கூடாது, பேசக்கூடாது, காமத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் நமக்கு தந்திரா முரண்பாடுடையதாகத் தோன்றும் . ஆனால் காமத்தை விட்டு விலகி ஓடினால் ஒரு பொய்யான பிரம்மச்சரியம் பிறக்கும். நீ எவ்வளவு விலகி ஓடுகிறாயோ, அவ்வளவு அதைப் பற்றி சிந்திப்பாய்- ஏனேனில் அது அடிப்படைத் தேவை

தந்திரா சொல்கிறது தப்பியோட முயற்சிக்காதே- தப்பியோட முடியாது. பதிலாக இயற்க்கையைப் பயன் படுத்திக் கடந்து செல் ; கடந்து செல்வதற்க்காக தை ஏற்றுக்கொள்;சண்டையிடாதே;உன் கதலன் அல்லது காதலியோடு நிகழும் இந்த பரிமாற்றம் முடிவை நோக்கி செல்லாமல் ஆரம்ப நிலையிலேயே நீட்டிக்கப்பட்டால் கிளர்ச்சியே சக்தியாகிவிடும், நீ உச்ச நிலக்குச் சென்று அதை இழ்ந்துவிட்டால், வலிமை குன்றிவிடும்- இதை நீ ஒரு ஓய்வாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது எதிர்மறையானது. ( Negative ) தந்திரா கொடுக்கும் ஓய்வு உயர் நிலையானது – அது நேர் நிலையானது (positive ) இரண்டு துணைகள் இணையும் போது ஒருவருக்கொருவர் ஆதார சக்தி கொடுக்கிறார்கள்., அவர்கள் ஒரு வட்டமாகி , அவர்கள் சக்தி வட்டமாக நகர்கிறது. ஒருவருக்கு ஒருவர் வாழ்வளித்து, வாழ்வைப் புதுப்பித்து க் கொள்கிறார்கள்.

சக்தி இழக்கப்படுவதில்லை , மாறாக அதிகப்படியான் சக்தி கிடைக்கிறது, ஏனேன்றால் அடுத்த பாலை சந்திப்பதால் எல்லா செல்களும் தூண்டப்படுகின்றன. அந்த தூண்டுதலில் நீ இணைந்து, உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்லாமல் , ஆரம்ப நிலையிலேயே இருந்தால் சூடாக மாறிவிடாமல் , கதகதப்பான நிலையிலேயே இருந்தால் இரண்டு சக்திகள் சந்திக்கும்

நீ இந்த செயலை பல மணி நேரங்களுக்கு நீட்டிக்கலாம், விந்து வெளியேற்றம் இல்லாவிட்டால். சக்தி வெளியே எறியப்படாவிட்டால் இது ஒரு தியானமாகிவிடும். இதன் மூலம் நீ முழுமை பெருகிறாய்.உன் பிளவுபட்ட தன்மை இணைக்கப்படுகிறது.

எல்லா மனநோயும் பிளவே. நீ மிண்டும் இணைக்கப்பட்டால் மீண்டும் குற்றமற்ற குழந்தையாக மாறிவிடுகிறாய்.நீ இந்தக் குழந்தை தன்மையை அடைந்துவிட்டால், வெளி சமுதாயத்தைப் பொருத்தவரை நீ அதற்கேற்றபடி நடந்து கொள்ள முடியும். ஏனேனில், அது ஒரு நாடகம்தான் எனப்து உணக்குத் தெரியும்
( முதல் சூத்திரம் முடிந்தது )

ஓஷோ;- தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

Wednesday, July 04, 2007

கலவியின் வரைபடங்கள் ....

காமம் சூத்திரம் 1 – புணர்ச்சியின் துவக்கத்தில்…. பகுதி 2

மூன்று சாத்தியக் கூறுகள் உள்ளன.இரண்டு காதலர்கள் இணைவது , மூன்று படங்களை உர்வாக்கலாம்- வடிவையல் படங்கள், ஒன்று சதுரம், இரண்டாவது முக்கோண்ம், மூன்றாவது வட்டம்.

இது ஒரு பழங்கால தந்திரா ஆராய்ச்சி. சாதாரணமாக நீ கலவியில் ஈடுபடும்போது நான்கு மனிதர்கள் இருக்கிறார்கள். இது தான் சதுரம். நான்கு கோணங்கள் – காரணம் நீ உனக்குள் பிளவுபட்டு இரண்டாக இருக்கிறாய். உன் துணை இரண்டாக, எனவே நான்கு மனிதர்கள். இரண்டு நபர்கள் சந்திக்கவில்லை ; நான்கு பேர் சந்திக்கிறார்கள் , இது ஒரு கூட்டமாகிவிடுகிறது- எனவே ஆழ்ந்த சந்திப்பாக இருக்க முடியாது. இது ஒரு சந்திப்பைப்போல தோன்ற்கிறதே தவிர நிஜமான சந்திப்பல்ல; உன் ஆழ்ந்த பகுதி மறைந்திருக்கிறது. உன் காதலியின் ஆழ்ந்த பகுதியும் மறைந்திருக்கிறது. இரண்டு தலைகள் சந்திக்கின்றன. இரண்டு இத்யங்கள் சந்திப்பதில்லை. அவை மறைக்கப்பட்டுள்ளன் .

இரண்டாவது வகை சந்திப்பு ஒரு முக்கோண்ம் போன்றது. நீங்கள் இரண்டு பேர்- இரண்டு கோண்ங்கள் ; ஆனால் சில கண்ங்களில் திடீரென்று ஒன்றாகி விடுகிறீர்கள் – இதுதான் மூன்றாவது கோண்ம்- உங்கள் இரண்டுபட்டத் தன்மை மாறி ஒருமை உண்டாகிறது. இது சதுரச் சந்திப்பை விட மேலானது- சில வினாடிகளிலாவது ஒருமை கிடைக்கிறது- அந்த ஒருமை உனக்கு வலிமையை, நலத்தை தருகிறது- நீ மீண்டும் இளமையை , உயிரோட்டத்தை உண்ர்கிராய்

மூன்றாவது சந்திப்பு தந்திரா கூறும் சந்திப்பு , அது தான் சிறந்தது. நீ ஒரு வட்டமாக மாறிவிடுகிறாய். அங்கு கோண்ங்கள் இல்லை. சந்திப்பு ஒரு நொடிப்பொழுது மட்டுமே இருப்பதில்லை. அது மூளை சம்பந்த பட்ட விஷயமில்லை. இதில் காலமில்லை. இது நீ விந்து வெளியேற்றத்தை நாடமல் இருந்தால்தான் நிகழ முடியும். நீ விந்துவை வெளியேற்றத்த துடித்தால் அது ஒரு முக்கோண்மாகிவிட முடியும். ஏனேன்றால் , விந்து வெளியேறும் போது தொடர்பு நிலை மறைந்து விடுகிறது.

துவக்கத்திலேயே இரு . முடிவை நோக்கிச் செல்லாதே துவக்க நிலையிலேயே இருப்பது எப்படி? பல விஷயங்களை நீ நினைவில் கொள்ள வேண்டும்.

( தொடர்ச்சி அடுத்த பதிப்பில் )

ஓஷோ;- தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

காமம் சூத்திரம் 1 – புணர்ச்சியின் துவக்கத்தில்…. பகுதி 1

முன்னுரை : “ தந்திராவின் பொருள், நீ கடந்து செல்வதற்குறிய ஒன்றாக காமத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான்.காமத்தை நீ முழுமையாக புரிந்துகொண்டுவிட்டால்,ஞானிகள் பேசிய பேரின்பம், எல்லையற்ற ஆனந்தம் ஆகியவைகளையும் நீ புரிந்துகொளள முடியும்” – ஓஷோ

முதல் சூத்திரம் :- “ புணர்ச்சியின் துவக்கத்தில் உன் கவனத்தை ஆரம்ப நெருப்பின் மீது வை. தொடர்ந்து அப்படிச் செய்வதன் மூலம் முடிவிலிருக்கும் கனலை தவிர்த்துவிடு “

இதுதான் மிகப் பெரிய வேறுபாடு- உனக்கு காமம் ஒரு வெளியேற்றும் செயல் . நீ அதனுள் அவசரமாகச் செல்கிறாய். உனக்கு விடுதலை தேவை- நிரம்ப வழியும் சக்தி வெளியேற்றப்படவேண்டும். நீ சங்கடத்திலிருந்து விடுபடுவாய். இந்த நிலை ஒரு வலுவற்ற நிலை. நிரம்பி வழியும் சக்தி ஆவலை , இருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய். சக்தி வெளியேற்றப்பட்டதும் நீ வலுவிலந்து விடுகிறாய். இந்த வலுவின்மையை ஓய்வு என்று நினைக்கிறாய். ஏனென்றால் ஆவல் இல்லை ; நிரம்பி வழியும் சக்தி இல்லை. நீ இளைப்பாறலாம்.ஆனால் இந்த ஓய்வு எதிமறையானது.நீ உன் சக்தியனத்தையும் வெளியே கொட்டுவதன் மூலம் இந்த ஓய்வுக்கு மிகப்பெரிய விலை கொடுக்கிறாய். இந்த ஓய்வு உடலில் மட்டுமே. இது ஆழமாகச் சென்று இறைத்தன்மையாக மாறாது.

இந்த முதல் சூத்திரம் அவசரப்படாதே; முடிவை அடையத் துடிக்காதே என்று கூறுகிறது. துவக்க நிலையிலேயே இரு. கலவியில் இரண்டு பகுதிகள் உள்ளன.துவக்கம், முடிவு என்று. துவக்கத்திலேயே இரு. துவக்க நிலை அதிக ஓய்வும் கதகதப்பும் தருவது- முடிவுக்குச் செல்ல அவசரங் காட்டதே. முடிவை முற்றிலும் மறந்துவிடு.

புணர்ச்சியின் துவக்கத்தில் உன் கவனத்தை ஆரம்ப நெருப்பின் மீது வை.

நீ நிரம்பி வழியும்போது, வெளியேற்றத்தப் பற்றி சிந்திக்காதே. இந்த னிரம்ப வழியும் சக்தியோடு இரு . விந்தை வெளியேற்ற நினைக்காதே. அதை மறந்துவிடு.ஆரம்ப நிலையில் இருக்கும் கதகதப்பிலேயே இரு. உன் காதலன் அல்லது காதலியோடு ஒன்றாகி விட்டதைப் போல் இரு. ஒரு வட்டத்தை உருவாக்கு..

( தொடர்ச்சி அடுத்த பதிப்பில் )

ஓஷோ;- தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

Tuesday, July 03, 2007

முல்லா- ஒரு பெண்-“ நூடுல்ஸ்”

முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார்.அதற்க்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “ உன்னுடைய ரகசியம் என்ன ? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே ? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.”

நண்பன் கூறினான் ; “ மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

” ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்” என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் . ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

“ சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ?” என்று முல்லா கேட்டார். “ அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும் “ என்று நண்பன் பதில் கூறினான்.

“தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? “ என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்க்கு அந்த நண்பன் பதில் தருகையில் , “ தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள் “ என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் “ ஹல்லோ , உணக்கு “ நூடுல்ஸ்” ( ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா ? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “ இல்லை “ என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான் , “ உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா ? “
“இல்லை” என்றாள். முல்லா ஒரு நிமிடம் திகைத்தான் . “ தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது? “ என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “ உணக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு “ நூடுல்ஸ்” பிடிக்குமா ? “

ஓஷோ: “ தத்துவம் என்பது அநேகமாக முட்டாள்தனமானதுதான்”

- ஓஷோ

;- தந்திரா ஆன்மிகமும் பாலுண்ர்வும்