Thursday, July 12, 2007

காமம் சூத்திரம் 3 – பகுதி 1 (அண்டமே துணையாகிவிடும்…. )

மூன்றாவது சூத்திரம்.

அரவணிப்பில்லாவிட்டாலும் சங்கமத்தை நினைவில் கொள்வதே மாற்றம் விளைவிக்கும்,


ஒரு முறை நீ அறிந்து கொண்டால், பிறகு துணைகூட தேவையில்லை , நீ வெறுமனே அந்த செயலை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனுட் செல்ல முடியும். ஆனால் முதலில் நீ அதை உணர்ந்துருக்க வேண்டும். இது கொஞ்சம் கடினமானது ஆனாலும் இது நிகழ்ந்திருக்கிறது. அது நிகழாதவரை நீ யாரையாவது சார்ந்து இருக்க வேண்டும் . பல்வேறு காரண்ங்களால் இது நிகழ்கிறது.

உனக்கு அந்த உணர்வு வரப்பெற்றிருதிருக்குமானால் நீ மறைந்து ஒரு அதிரும் அலையாக நீ மாறிவிட்ட கணத்தை நீ அறிந்திருந்தால், உன் துணையோடு உண்டாக்கிக் கொண்ட அந்த வட்டத்தால் உன் துணை இல்லாது போய் விடுவதையும் நீ உணர முடியும், நீ தான் இருக்கிறாய், உன் துணை இல்லை- அவள் இல்லை-அல்லது நீ தான் இருக்கிறாய் அவன் இல்லை.

ஒருமை உனக்குள் நிகழ்வதால் துணை மறைந்துவிடுகிறது. இந்த அனுபவம் பெண்களுக்கு நிகழ்வது எளிது- அவர்கள் கண்களை மூடியபடி கலவியில் ஈடுபடுகிறார்கள்,

இந்த நுணுக்கத்தில் நீ கண்களை மூடியிருந்ததல் நலம் பயக்கும். அப்பொழுதுதான் உள்ளே ஒரு வட்டத்தினை முழுமையாக உணரமுடியும் . இதை நினைவில் கொள் கண்களை மூடிக்கொண்டு, படுத்துக்கொள்-உன் துணை அங்கே இருப்பதைப்போல உணர், உன் உடல் அதிர்ந்து அலைகளாக மாறத் தொடங்கும்.

அதை அனுமதி , அடுத்தவர் அங்கேயிலலை என்பதை முற்றிலும் மறந்துவிடு , அடுத்தவர் இருப்பதைப் போல இயங்கு, துவக்கத்தில் தான் அடுத்தவர் இருப்பதை போல உண்ரவேண்டிவிடும்- ஒரு முறை அறிந்து கொண்டால் , உண்மையிலே அடுத்தவர் அங்கே இருப்பதாக மாறிவிடும் . நீ கலவியில் இயங்குவதைப் போல இயங்கு உன் காதலியோடு எப்படியேல்லாம் செய்ய நினைத்தாயோ , அப்படியெல்லாம் செய், கத்து , இயங்கு , குதி, அந்த வட்டம் , மாய வட்டம், அங்கே இருக்கும், அந்த வட்டம் உருவாவதை நீ உணர முடியும், இந்த வட்டம் , ஆணோடோ , அல்லது பெணோடோ உருவாக்கப்படுவதல்ல , நீ பெண்ணாக இருந்தால் இந்த அண்டமே ஆனாகி விடுகிறது. ஆணாக இருந்தால் அண்டமே பெண்ணாகி விடுகிறது. நீ இந்த பிரபஞசத்தோடு ஆழமான சங்கமத்தில் இருப்பாய்-வாயிலாக இருந்த அடுத்தவர் அங்கே இருக்கத் தேவையில்லை

( தொடரும் …. )

ஓஷோ : தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

3 comments:

Anonymous said...

பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சைக் கொடியைப் படைப்பானா‍
/ கண்ணதாசன்/

தொடருங்க சார், உங்க பதிவைப் பார்வையிட திருட்டு வாசகர்/வாசகிகள்
அலைமோதுவார்கள்.


புள்ளிராஜா

Anonymous said...

குரு கலக்கிறிங்லே. வாழ்த்துக்கள்
குரு கலக்கிறிங்லே. வாழ்த்துக்கள்
குரு கலக்கிறிங்லே. வாழ்த்துக்கள்
குரு கலக்கிறிங்லே. வாழ்த்துக்கள்
குரு கலக்கிறிங்லே. வாழ்த்துக்கள்

Anonymous said...

நண்பரே !

நீங்கள் சொல்லும் விசயம் புரிந்தாலும் , சாத்தியமா என்பது தெரியவில்லை , யாராவது தங்களது அனுபவங்களை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ( குறிப்பாக தங்களது அனுபவங்களை எழுதலாமே !)