Tuesday, May 29, 2007

ஹெல்மெட் போடாத அரசர்

ஒரு அரசருக்கு நாட்டு மக்கள் மேல் தீடிரென பாசம் வந்தது, உடனே ஒரு ஆனை பிறப்பித்தார் “ நாளை மறுநாள் முதல் அனைவரும் தலைகவசம் அனிந்து தான் தேர் ஓட்டவேண்டும் “ என

முல்லாவிற்க்கு ஒரு சந்தேகம் “ அரசே ! என்ன திடீர் பாசம் , ஏதாவது ஹெல்மெட் கம்பனியிடம் காசு வாங்கிவிட்டிர்களா? ஊரேல்லாம் சோம பானம் சுராபானம் என விற்றுக்கொண்டிருக்கிறோம் அதையெல்லாம் விட்டு விட்டு திடீர் என ஹெல்மெட் பற்றிய அக்கரை? “ எனக் கேட்டார்

அரசர் “ ச்சீ வாயை மூடு ! அநியாயமாக உயிர்கள் பலியாவதை தடுக்கவே இந்த சட்டம்! “ என்றார்

முல்லாவிற்க்கு அச்சர்யம் , ஏனேனில் ,அரசரின் ஏகப்பட்ட வாரிசுகளின் சண்டையால் அநியாயமாக தினம் பல உயிர்கள் பலியாவதை நாடே அறியும். அதனால் அவர் தனக்குத்தானே “ போடவேண்டிய நேரங்களில் இவர் மறக்காமல் ஹெல்மெட் போட்டிருந்தால் இத்தனை வாரிசுகள் இறுந்திருக்காது! ஹ்ம் எத்த்னையோ உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கும், எல்லாம் காலம் கடந்த யோசனை! “ என முனுமுனுத்தார்

எங்கேயோ படித்த நினைவு- ஆனந் நிருப்

6 comments:

Anonymous said...

ஹஹஹஹ... தமிழ் வலைச்சூழலில் நடக்கும் சண்டைகளில் சலிப்புற்று ஆறுதலுக்கு ஒதுங்க ஒரு நல்ல சூழல் உங்கள் தளம்..

நன்றாக சிரித்து மனம் லேசாகிறது..

ஓஷோவின் மற்றய கருத்துக்களையும் முன்வைத்து எழுதுங்கள். பலருக்கும் ஒரு தூண்டுதலாய் இருக்கும்..

வாழ்த்துக்கள் ஆனந்த்!

Santhosh said...

:)) Good Ones

ஆனந்த் நிருப் said...

கண்டிப்பாக ஓஷோவின் மற்ற கருத்துக்கள் மற்றும் தியான முறைகள் மற்றும் செய்திகள் அனைததையும் உள்ளடக்கியதாக இந்த தளம் உருவாகும்,உங்களுடைய ஊக்கதலுக்கு மிகவும் நன்றி

netsonic said...
This comment has been removed by a blog administrator.
selventhiran said...

ஆனந்த் நிரூப் செம உள்குத்து கலக்குங்க... இன்னிக்கு ஒஷோ உயிரோட இருந்தா "அவையத்து முந்தி இருக்க செய்யும்" இந்த குறளோவியத்தைதான் கிழி கிழியென்று கிழித்திருப்பார்.

sankar dubai said...

நீங்க எந்த நேரத்தில இப்படி ஒரு கதை போட்டிங்கனு தெரியல தமிழ்நாடே தலை கவசத்தோட சுத்துது