Tuesday, June 12, 2007

ஹிம்.. எத்தனை ஆண்டுகள் நாம் செங்கல்லை தேய்த்துக் கொண்டிருப்போமோ?

ஒரு ஜென் குருவைப்பற்றிய கதை

ஒரு சீடர் இருபது வருடங்களாக தொடர்ந்து மிக கடுமையாக தியானம் செய்து கொண்டு இருந்தார், அவர் அனைத்து முறைகளையும் முயற்சி செய்தார் ( யோகா முத்திரைகள் மற்றும் அனைத்து வகையான தியான முறைகள் போன்றன ) அதாவது இனி செய்ய ஒன்னுமே இல்லை என்ற அளவுக்கு மிக மிக கடுமையாக தன்னை வருத்தி தியானம் செய்து கொண்டிருந்தார்.

அவ்வாரு ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமைதியாக ( வெளிப்புறதோற்றத்திலாவது ) புத்தரை போல் ஆடாமல் அசையாமல் உக்காந்து கொண்டிருந்தார். அதை பார்த்தால் இவர் என்ன சிலையாகி விட்டறோ? என்று என்னுமளவுக்கு அசைவின்றி அமர்ந்திருந்தார் . அப்போது அவருடைய ஜென் குரு ஒரு செங்கல்லை எடுத்துக்கொண்டு அவர்முன் அமர்ந்து அதனை சத்தம் வருமாறு நிலத்தில் தேய்க்க ஆரம்பித்தார்..

அவ்வாறு தேய்த்தது மிகக் கொடிய சத்ததை உருவாக்கியது.. சீடர் பொருத்து பார்த்தார் குரு நிருத்தியபாடாய் தெரியவில்லை . சீடரின் பற்க்கள் எல்லாம் கூச ஆரம்பித்தது கடைசியாக அவர் அந்த குருவை பார்த்து “ நிருத்துங்கள் ! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? “ எனக் கேட்டார்

உடனே குரு அந்த சீடரை பார்த்து “ கடந்த 20 வருடங்களாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? தியானம் என்ற பெயரில் அதே போல் நானும் இந்த செங்கல்லை முகம் பார்க்கும் கண்ணாடி ஆக்க முயற்ச்சிக்கிறேன் என்றார் “

சீடர் “ என்ன முட்டாள் தனமான பேச்சு இது , நீங்கள் காலங் காலமாக இதை தேய்த்துக்கொண்டு இருந்தாலும் இது கண்ணாடி ஆகாது “ என்றார்

“ஆம்! அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் ! கடந்த இருபது வருடங்களாக நீ தியானம் என்ற பெயரில் உனது மனதை அலங்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாய் ! மனதை மாற்றியமைப்பது தியானம் அல்ல ! மனம் அற்று இருப்பதே தியானம்- மனதை கடப்பதே தியானம் , இது நல்லது இது கெட்டது என்று பிரித்து பார்க்கும் இந்த மனதை முற்றிலும் விட்டுவிடுவதே தியானம் “ என்றவாறே தான் தேய்த்துக் கொண்டிருந்த செங்கல்லை தூக்கி எறிந்தார்

அந்த சீடரிடமும் ஒரு ஏதோ ஒன்று தொலைந்து போனது- ஓஷோ

:- the Fish in The Sea is not Thirsty, Chapter 10

(ஹிம்.. எத்தனை ஆண்டுகள் நாம் செங்கல்லை தேய்த்துக் கொண்டிருப்போமோ ? )

No comments: