Friday, July 06, 2007

காமம் சூத்திரம் -2 அசைவில் உட்செல்- பகுதி 1

“ இப்படிப்பட்ட அரவனைப்பைல் உன் புலன்கள் அனைத்தும் இலைப்போல அசைக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் “

இப்படிப்பட்ட அரவனைப்பில் – இப்படிபட்ட ஆழமான பரிமாற்றத்தால் உன் காதலன் அல்ல்து காதலியோடு உன் புலன்கள் இலைகளைப் போல ஆட்டுவிக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல்

நாம் பயமடந்து விடுகிறோம் – கலவியில் இயங்கும் போது நம் உடல்களை அதன் விருப்பத்திற்க்கேற்ப இயங்க அனுமதிப்பதில்லை, ஏனேன்றால் உடலை அதன் விருப்பப்பட்ய் இயங்க அனுமதிப்பதில்லை. ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதித்தால் கலவி உடல் முழுவதும் பரவிவிடும். அது பிறப்புறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கும் போது நீ அதை கட்டுபடுத்த முடியும். ஆனால் உடல் முழுதும் பரவி விட்டால் நீ அதை கட்டுபடுத்த முடியாது.நீ நடுங்க ஆரம்பித்துவிடுவாய் ; நீ கத்த ஆரம்பித்துவிடுவாய்; உன் உடல் கட்டுபாட்டை எடுத்துக் கொண்டு விட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.

நம் இயக்கத்தை நாம் அடக்கி வைக்கிறோம் – பெண்களின் அசைவுகளை உலகம் முழுதும் கட்டுபடுத்தி வைத்துள்ளது. அவர்கள் உயிரற்ற உடல்களைப்போல இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை இப்படி அடக்கி வத்துள்ளார்கள் ?

பயம்- இருக்கிறது- ஒரு முறை பெண்ணின் உடல் ஆட்கொண்டுவிட்டால், ஒரு ஆணால் அவளை திருப்தி செய்ய முடியாது . ஏனெனில் பெண்களுக்கு சங்கிலித்தொடாரான உச்ச நிலை உள்ளது. ஆண் ஒரு முறைதான் உச்ச நிலைக்குச் செல்ல முடியும். ஆனால் பெண்ணால் பல முறை தொடர்ந்து உச்சநிலை ஏய்தமுடியும் , பல உச்சநிலைகளை அடைந்த பெண்களைப்பற்றி செய்திகள் வந்துள்ளன.எந்த ஒரு பெண்ணும் முன்று முறை தொடர்ந்து உச்ச நிலை அடைய முடியும் . ஆனால் , ஒரு ஆனால் ஒரு முறைதான் முடியும் . ஆனால் ஒரு ஆணால் ஒரு முறைதான் முடியும் . என்வே ஒரு மனிதனின் உச்சநிலை பெண்ணைத் தூண்டி விட்டுவிட்டால் பிறகு கஷ்டமாகிவிடும் . பிறகு சமாளிப்பது எப்படி ?
உடனே அவளுக்கு வேறு ஒரு ஆண் தேவைப்படுகிறான்; ஆனால் குழுப்புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுக்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம். எனவே பெண்களை அடக்கி வைப்பதே மேல் . எண்பதிலிருந்து , தொண்ணூறு சதவிகிதப் பெண்கள்Uக்கு உச்சக்கட்டம் என்பது என்னவென்றே தெரியாது. அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கண்வனை திருப்தி செய்ய முடியும் இதெல்லாம் வேறு விஷயம். ஆனால் , அவர்கள் நிறைவடைவதில்லை. எனவே , பெண்களிடத்து வெருப்பையும் விரக்தியையும் , கசப்பையும் உலகம் முழுவதும் காண முடிகிறது. எனெறால் அதற்க்குக் காரணம் இதுதான் அடிப்படை த் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.

(தொடர்ச்சி அடுத்த பதிப்பில் )

ஓஷோ : - தந்திரா ஆன்மீகமும் பாலுண்ர்வும்

No comments: