Thursday, July 05, 2007

நீடித்த புணர்ச்சி - காமம் சூத்திரம் 1 பகுதி 3

முதலில் காமத்தை, கலவியை எங்கோ செல்வதற்கான வழியாக நினைக்காதே; அதை ஒரு பாதையாக எடுத்துக் கொள்ளாதே; அது தான் முடிவு.

இரண்டாவது எதிர்காலத்தைப் பற்றி நினைக்காதே; கலவியின் துவக்கத்தில் நீ நிகழ் காலத்தில் இருக்கமுடியவில்லையென்றால் , பிறகு எப்பொழுதும் உன்னால் நிகழ்காலத்தில் இருக்க முடியாமல் போய்விடும். கலவியின் இயற்க்கைத் தன்மையே உன்னை நிகழ்காலத்துக்குள் வீசியெறிவதுதான்.

நிகழ் காலத்தில் இரு. இரண்டு உடல்கள் ஆத்மாக்கள் சந்தித்து ஒன்றாக கரையும் உருகும், இனையும் சந்திப்பை அனுபவி. எங்கோ போகிறோம் என்பதை மறந்துவிடு. எங்கும் போகாமல் இந்த கண்த்திலேயே இருந்து கரை . அன்பும் கதகதப்பும் நீ கரைவதற்க்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அத்னால்தான் அன்பு இல்லையென்றால் கலவி வேகமானதாகி விடுகிறது. நீ மற்றவரைப் பயன்படுத்துகிறாய் அவர்கள் ஒரு பாதையாகி விடுகிறார்கள். மற்றவர்கள் உன்னை பயன்படுத்துகிறார். இருவரும் ஒருவர ஒருவர் ஏமாற்றுகிறீர்கள்.

ஆனால் அன்பிருந்தால் இருவரும் ஒன்றாக கலந்துவிட முடியும். இந்தக்கலவி, பல புதிய உள்ளோளியைக் கொடுக்க முடியும் , செயலை முடித்துவிடும் வேகத்தில் நீ இல்லாவிட்டால், இந்த செயல் நாளடைவில் இறைத் தன்மை பெற்றதாகிவிடும்,காம உருப்புகள் கூட ஒன்றுக்குள் ஒன்றாக கரைந்துவிடும்.பல மணி நேரங்கள் நீங்கள் சேர்ந்து இருக்கும்போது ஒரு ஆழமான அமைதியான பரிமாற்றம் நிகழ்கிறது. நேரம் செல்லச் செல்ல இந்த ஒருமை மேலும் மேலும் ஆழமாகச் செல்லும் ஆனால் சிந்திக்காதே. ஒன்றாகி அந்த கண்த்தில் இரு. அது சமாதி நிலையாக , பேரானந்தமாக மாறி விடுகிறது. இதை நீ அறிந்து கொண்டால், உண்ர்ந்து தெளிந்துவிட்டால் உன் காமம் நிறைந்த மனம் காமம் அற்றாதாகி விடுகிறது. மிகுந்த ஆழமான பிரம்மச்சரியம் பிறக்கிறது.

பிரம்மச்சாரியாக இருக்க வேண்டுமென்றால் பெண்களை/ஆண்களைப் பார்க்க கூடாது, பேசக்கூடாது, காமத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் நமக்கு தந்திரா முரண்பாடுடையதாகத் தோன்றும் . ஆனால் காமத்தை விட்டு விலகி ஓடினால் ஒரு பொய்யான பிரம்மச்சரியம் பிறக்கும். நீ எவ்வளவு விலகி ஓடுகிறாயோ, அவ்வளவு அதைப் பற்றி சிந்திப்பாய்- ஏனேனில் அது அடிப்படைத் தேவை

தந்திரா சொல்கிறது தப்பியோட முயற்சிக்காதே- தப்பியோட முடியாது. பதிலாக இயற்க்கையைப் பயன் படுத்திக் கடந்து செல் ; கடந்து செல்வதற்க்காக தை ஏற்றுக்கொள்;சண்டையிடாதே;உன் கதலன் அல்லது காதலியோடு நிகழும் இந்த பரிமாற்றம் முடிவை நோக்கி செல்லாமல் ஆரம்ப நிலையிலேயே நீட்டிக்கப்பட்டால் கிளர்ச்சியே சக்தியாகிவிடும், நீ உச்ச நிலக்குச் சென்று அதை இழ்ந்துவிட்டால், வலிமை குன்றிவிடும்- இதை நீ ஒரு ஓய்வாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது எதிர்மறையானது. ( Negative ) தந்திரா கொடுக்கும் ஓய்வு உயர் நிலையானது – அது நேர் நிலையானது (positive ) இரண்டு துணைகள் இணையும் போது ஒருவருக்கொருவர் ஆதார சக்தி கொடுக்கிறார்கள்., அவர்கள் ஒரு வட்டமாகி , அவர்கள் சக்தி வட்டமாக நகர்கிறது. ஒருவருக்கு ஒருவர் வாழ்வளித்து, வாழ்வைப் புதுப்பித்து க் கொள்கிறார்கள்.

சக்தி இழக்கப்படுவதில்லை , மாறாக அதிகப்படியான் சக்தி கிடைக்கிறது, ஏனேன்றால் அடுத்த பாலை சந்திப்பதால் எல்லா செல்களும் தூண்டப்படுகின்றன. அந்த தூண்டுதலில் நீ இணைந்து, உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்லாமல் , ஆரம்ப நிலையிலேயே இருந்தால் சூடாக மாறிவிடாமல் , கதகதப்பான நிலையிலேயே இருந்தால் இரண்டு சக்திகள் சந்திக்கும்

நீ இந்த செயலை பல மணி நேரங்களுக்கு நீட்டிக்கலாம், விந்து வெளியேற்றம் இல்லாவிட்டால். சக்தி வெளியே எறியப்படாவிட்டால் இது ஒரு தியானமாகிவிடும். இதன் மூலம் நீ முழுமை பெருகிறாய்.உன் பிளவுபட்ட தன்மை இணைக்கப்படுகிறது.

எல்லா மனநோயும் பிளவே. நீ மிண்டும் இணைக்கப்பட்டால் மீண்டும் குற்றமற்ற குழந்தையாக மாறிவிடுகிறாய்.நீ இந்தக் குழந்தை தன்மையை அடைந்துவிட்டால், வெளி சமுதாயத்தைப் பொருத்தவரை நீ அதற்கேற்றபடி நடந்து கொள்ள முடியும். ஏனேனில், அது ஒரு நாடகம்தான் எனப்து உணக்குத் தெரியும்
( முதல் சூத்திரம் முடிந்தது )

ஓஷோ;- தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

1 comment:

Anonymous said...

கண்ட நாய்களெல்லாம் ஓஷோ என்ற அழகான மனிதரை காமவாத்தியார் என்றே சொல்கின்றன. உங்களால் ஓஷோவைப்பற்றி வேறெதுவுமே பகரமுடியாதெனில் காமம் பற்றிமட்டும் வாந்தியெடுத்துவிட்டுப் போங்கள். அவர் ஒன்றும் மைக் பிடித்து காமம் பற்றி அலரவில்லை. தன்னிடம் வந்தவர்களை தயார்படுத்தினர். சிறுகுழந்தைகளும் வந்துபோகும் இடத்தில்தான் நீங்கள் இவற்றைச் சொல்லவேண்டுமா? அவதானித்து பதில் சொல்லுங்கள்.

ஒரு தோழி