Friday, July 13, 2007

காமம் – சூத்திரம்3-பாகம் 2 - நீ ஒரு பெண்ணொடு புணரும் போது….

உன் துணையாக இருக்கும் நபர் வெரும் கதவுதான்- போது, பிரபஞ்சத்தோடு புண்ர்கிறாய். முழுமைக்குள் செல்வதற்க்கான கதவே அடுத்தவர், நீ இருக்கும் வேகத்தில் அதை உண்ர்வதில்லை , நீங்கள் ஆழ்ந்த சங்கமத்தில் மணிக்கண்க்காக அரவணிப்பில் இருந்தால், நீ மற்றவரை மறந்து விடுவா-அந்த நபர் இந்த பிரபஞ்சத்தின் நீட்டிப்பே என்பதை உணர்வாய்.

ஒரு முறை அறிந்து கொண்டால், நீ இந்த நுட்பத்தைப் பயன் படுத்தலாம், நீ தனியாக இதைப் பயன் படுத்தலாம். நீ தனியாக இதைப் பயன் படுத்தும் போது உண்க்கு ஏராளமான சுதந்திரம் கிடைக்கிறது. மற்றவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. உண்மையில் இந்த பிரபஞ்சமே மற்றவராக மாறி விடுவதால்தான் இது நிகழ்கிறது-இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடித்து, ஒருவர், இடைவிடாது பிரபஞ்சத்தோடு சங்கமிக்க முடியும்.

வேறு பரிமாணங்களிலும் நீ இதை செய்யலாம் . காலையில் நடக்கும் போது இதை செய்யலாம். அப்போது நீ காற்றுடன் , உதிக்கின்ற சூரியனுடன், ஆகாயத்துடன் , மரங்களுடன் தொடர்ப் கொள்கிறாய். இரவில் நட்சத்திரங்கலிருந்து தொடங்கி நீ இதை செய்யலாம். ஒரு முறை நீ இது எப்படி நிகழ்கிறது என்று அறிந்து இந்த அண்டத்தோடு கலவியில் ஈடுபட முடியும்.

ஆனால் மனிதர்களோடு துவங்குவது நல்லது – ஏனென்றால் அவர்கள்தான் உனக்கு அருகாமையில் உள்ளார்கள். ஆனால் அவர்களைத் தவிர்த்து விடலாம். நேரடியாக நீ கதவை தாண்டி சென்று விட முடியும்.

சங்கமத்தை நினைக்கும் போதெ மாற்றம் நிகழும்”

நீ மாற்றமடைவாய் . புதிய மனிதனாகி விடுவாய் .

தந்திரா காமத்தை ஒரு வாகனமாகப் பயன் படுத்துகிறது. அதுதான் சக்தி , அது உன்னை மாற்றி , கடந்து சென்றடையும் பல நிலைகளைக் கொடுக்கிறது.
( தொடரும் )
ஓஷோ : தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

1 comment:

Anonymous said...

SEX paavam illai. Sex illaddaa Life illaiappa.

pulliraja