Saturday, November 22, 2008

டாஷ்மாக்கில் முல்லா

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?

முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “

நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “

நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்
-------------------------------------------------------------------------------------------------
முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.

ம.மருத்துவர் “ கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “

முல்லா “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

ம.ம “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “
------------------------------------------------------------------------------------------------
-ஓஷோ