Monday, November 24, 2008

வேலையோடு விளையாடு!!!


கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

3 comments:

Anonymous said...

ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –

Isn't he saying " Meditate through your work and love the work you do.. " .. very nice!!

My father is a great fan of Osho and I used to gift him only osho's book .. Those were the days my father and I used to discuss abt all his works, me especially enjoyed akku-veru anni veraai discussing abt what osho wrote with my father. Hope You now know why I am like this . :D ...

.. keep going. Sorry for posting my comments in English and another big sorry for doing "cut,copy +paste " things without your permission.. just kidding sibi .. :) .

regards,
Janu

6mathi@gmail.com said...

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது.வேலையும் நடக்கும்.வேலையில் ஒன்றினாலே தியானம்.ஆடிப்பாட அது மகிழ்ச்சி தியானம்.ஆ.மதியழகன்.

Kamarajosho said...

You are very correct