Tuesday, May 22, 2007

புதர் மறைவில் ஒரு காதல் ஜோடி


அந்த பூங்காவில் இரண்டு வெண்கலச் சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.ஒரு ஆணும் பெண்ணும் காதலால் ஏங்கித்த்விப்பது போன்ற உணர்ச்சி பாவத்துடம் வார்க்கப்பட்டிருந்தன்.முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த சிலைகள் ஓன்றை ஒன்று தொடாதவாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஒரு நாள் அவ்வழியே சென்ற ஒரு மந்திரவாதி இந்த அழகிய சிலைகளை கண்டான்.
" என் மந்திர சக்தியால் இவர்களுக்கு ஒரு மணி நேரமாவது உயிர் கொடுத்து விட்டால் இவர்களது காதல் ஏக்கம் நிறைவடையும். அவர்கள் அனைத்துக்கொள்ளலாம் ; ஒருவரை ஒருவர் காதலித்துக் கொள்ளலாம்" என்று நினைத்தன். அது புண்ணியம் என் நினைத்து தன் மந்திர சக்தியல் அவற்றை உயிர்ப்பித்தான்.
உயிர் பெற்றவுடன் இருவரும் கைகொர்த்துக் கொண்டு அங்கிருந்த புதருக்குப் பின்புரம் மறைந்தனர்.
புதர்க்குப் பின்னால் ஆனந்த ஆரவராம் உண்டாயிற்று. ஆவலை அடக்கம்டியாத மந்த்ரவாதி புதரின் இலைகளை ஒதுக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தான் .
அங்கே அந்த அழகி குத்துக்காலிட்டுக்குந்தியிருந்தாள். அவன் ஒரு பறவையை அவளுக்கு அடியில் பிடித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் பொறுத்து அவன் திடிரெனக் குதித்தெழுந்தான்.
" இப்பொழுது உன்முறை. அந்தப் பறவையை என் அடியில் பிடித்துக் கொள்.அதன் மீது மலம் கழிக்கிறேன்!" என்றான்.

ஓஷோ கூறுகிறார் : " காதல் புரிவதைப் பற்றி யார் கவலைப் படப் போகிறீர்கள்? முன்னூறு ஆண்டுகளாக அவர்கள் மீது பறவைகள் எச்சமிட்டுக் கொண்டிருந்தன. இது அடக்கப்பட்டதன் விளைவு! "


-ஓஷோவின் குட்டிக்கதைகள்

3 comments:

குசும்பன் said...

ஓஷோவின் குட்டி கதைகளை தமிழில்
தொகுத்து வழங்கும் தாங்களுக்கு
நன்றிகள்.

ஆனந்த் நிருப் said...

I am pleased to receive to see your comment, I have a plan to do more , not only stories but also his vision

Anonymous said...

Hey its a nice work
All the best