Friday, June 08, 2007

நாம் செம்மறி ஆடுகளே !


ஜார்ஜ் குருட்ஜீப் ஒருகதை சொல்வது வழக்கம் ; மலைகளால் சூழப்பட்ட ஒருவனத்தில் ஒரு மந்திரவாதி நிறையச் செம்மறி ஆடுகளை வைத்திருந்தான்.வேலைக்காரர்களைத் தவிர்க்கவும், ஆடுகள் மேய்ப்பதை த் தவிர்க்கவும், காட்டுக்குள் அவை காணாமல் போனால் தினமும் அவற்றை தேடி அலைவதைத் தவிர்க்கவும் வேண்டி , ஆடுகள் அனைத்தையும் அவன் வசியம் செய்துவிட்டான். ஒவ்வொன்றிடமும் ஒவ்வொரு விதமான் கதையைச் சொல்லி வைத்தான். ஒவ்வொரு ஆட்டுக்கும் வெவ்வேறு விதமான் மனதைக் கொடுத்தான்.

ஒன்றிடம் அவன் சொன்னான் ,” நீ ஆடல்ல .மனிதன்.எனவே ஒருநாள் மற்ற ஆடுகளைப் போல நீ கொல்லப்படுவாய் , பலியிடப்படுவாய் என்று பயப்பட வேண்டாம். அவை ஆடுகள். எனவே வீட்டுக்கு திரும்பிவருவது குறித்து நீ யோசிக்க தேவையில்லை “ வேறு சிலவற்றிடம் அவன் சொன்னான் , “ நீ ஆடல்ல, சிங்கம் “ இன்னும் சிலவற்றிடம் “ நீ ஒரு புலி “ என்றான். அன்றிலிருந்து அந்த மந்திரவாதி நிம்மதியாக இருந்தான் . செம்மறியாடுகள் தமக்கு வழங்கப்பட்ட மனதின்படி நடந்துகொள்ள தொடங்கின.

அவன் ஒவ்வொரு ஆடாக பிடித்துக் கொல்ல முடிந்தது . ஒவொரு நாளும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் உணவுக்காக ஆடுகளை க் கொல்வது அவன் வழக்கம். அதைபார்த்து , தன்னை ஒரு சிங்கம் அல்லது மனிதன் அல்லது புலி என நம்பிவந்த ஆடுகள் சிரித்துக்கொள்ளும் ; “ ஆடாயிருந்தால் இந்தக் கதிதான் .” ஆனால் பழைய காலத்தைப்போல் அவை பயப்படவில்லை. அப்போதெல்லாம் அவன் ஒரு ஆட்டை பிடித்து கொல்லும் போதெல்லாம் எல்லா ஆடுகளும் நடுநடுங்கின. “ நாளைக்கு நாமும் இவ்வாறு கொல்லப்படலாம். எவ்வளவுநாள் தப்பிபிழைக்க முடியும் ? “ எனப் பயந்தன. என்வேதான் மந்திரவாதியிடமிருந்து தப்பிக்க அவை காட்டுக்குள் ஓடிபோவது வழக்கமாயிருந்தது.

ஆனால் இப்போது எந்த ஆடும் தப்பி ஓடவில்லை, அவை புலிகள்,சிங்கங்கள், இப்படி , அவற்றில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த எல்லாவித மனங்களாகவும் அவை இருந்தன.
- ஓஷோ

( நாமும் அப்படித்தான், எவனோ சொன்னதை நம்பி மனிதம் என்பதை மறந்து பார்ப்பனாகவும், பகுத்தறிவுப் புலிகளாகவும், செஞ்சட்டை சிங்கங்கள் மற்றும் கழக கண்மனிகள் என பல்வேறு செம்மறிக்கூட்டங்களாக நம்மைத் தொலைத்துக்கொண்டுள்ளோம் )

2 comments:

Anonymous said...

The story is nice but you are wrong in your comment sir..

This is the same way how people where segregated in groups in ancient times.. even now its happening, in a different manner. Some people are made to believe FC, OBC, SC, ST, but ultimately everyone loathes STs and dont want to give them any credit.. It should be written in such a neat manner and not like what you have written..

Between, I only wonder how you are friend of Chella!

ஆனந்த் நிருப் said...

dear Sir ,

thanks for your comment, nice way you interpret, i just see the fights happenning in the blog so I write that way....

i don't have to have any idea that others are having, in fact, i don't have any idea at all.so you need not bother how i am freind to chella.

I am his friend only because he is not like me,

thank you sir

come again