Tuesday, July 03, 2007

முல்லா- ஒரு பெண்-“ நூடுல்ஸ்”

முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார்.அதற்க்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “ உன்னுடைய ரகசியம் என்ன ? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே ? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.”

நண்பன் கூறினான் ; “ மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

” ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்” என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் . ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

“ சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ?” என்று முல்லா கேட்டார். “ அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும் “ என்று நண்பன் பதில் கூறினான்.

“தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? “ என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்க்கு அந்த நண்பன் பதில் தருகையில் , “ தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள் “ என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் “ ஹல்லோ , உணக்கு “ நூடுல்ஸ்” ( ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா ? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “ இல்லை “ என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான் , “ உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா ? “
“இல்லை” என்றாள். முல்லா ஒரு நிமிடம் திகைத்தான் . “ தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது? “ என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “ உணக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு “ நூடுல்ஸ்” பிடிக்குமா ? “

ஓஷோ: “ தத்துவம் என்பது அநேகமாக முட்டாள்தனமானதுதான்”

- ஓஷோ

;- தந்திரா ஆன்மிகமும் பாலுண்ர்வும்

No comments: