Wednesday, July 04, 2007

கலவியின் வரைபடங்கள் ....

காமம் சூத்திரம் 1 – புணர்ச்சியின் துவக்கத்தில்…. பகுதி 2

மூன்று சாத்தியக் கூறுகள் உள்ளன.இரண்டு காதலர்கள் இணைவது , மூன்று படங்களை உர்வாக்கலாம்- வடிவையல் படங்கள், ஒன்று சதுரம், இரண்டாவது முக்கோண்ம், மூன்றாவது வட்டம்.

இது ஒரு பழங்கால தந்திரா ஆராய்ச்சி. சாதாரணமாக நீ கலவியில் ஈடுபடும்போது நான்கு மனிதர்கள் இருக்கிறார்கள். இது தான் சதுரம். நான்கு கோணங்கள் – காரணம் நீ உனக்குள் பிளவுபட்டு இரண்டாக இருக்கிறாய். உன் துணை இரண்டாக, எனவே நான்கு மனிதர்கள். இரண்டு நபர்கள் சந்திக்கவில்லை ; நான்கு பேர் சந்திக்கிறார்கள் , இது ஒரு கூட்டமாகிவிடுகிறது- எனவே ஆழ்ந்த சந்திப்பாக இருக்க முடியாது. இது ஒரு சந்திப்பைப்போல தோன்ற்கிறதே தவிர நிஜமான சந்திப்பல்ல; உன் ஆழ்ந்த பகுதி மறைந்திருக்கிறது. உன் காதலியின் ஆழ்ந்த பகுதியும் மறைந்திருக்கிறது. இரண்டு தலைகள் சந்திக்கின்றன. இரண்டு இத்யங்கள் சந்திப்பதில்லை. அவை மறைக்கப்பட்டுள்ளன் .

இரண்டாவது வகை சந்திப்பு ஒரு முக்கோண்ம் போன்றது. நீங்கள் இரண்டு பேர்- இரண்டு கோண்ங்கள் ; ஆனால் சில கண்ங்களில் திடீரென்று ஒன்றாகி விடுகிறீர்கள் – இதுதான் மூன்றாவது கோண்ம்- உங்கள் இரண்டுபட்டத் தன்மை மாறி ஒருமை உண்டாகிறது. இது சதுரச் சந்திப்பை விட மேலானது- சில வினாடிகளிலாவது ஒருமை கிடைக்கிறது- அந்த ஒருமை உனக்கு வலிமையை, நலத்தை தருகிறது- நீ மீண்டும் இளமையை , உயிரோட்டத்தை உண்ர்கிராய்

மூன்றாவது சந்திப்பு தந்திரா கூறும் சந்திப்பு , அது தான் சிறந்தது. நீ ஒரு வட்டமாக மாறிவிடுகிறாய். அங்கு கோண்ங்கள் இல்லை. சந்திப்பு ஒரு நொடிப்பொழுது மட்டுமே இருப்பதில்லை. அது மூளை சம்பந்த பட்ட விஷயமில்லை. இதில் காலமில்லை. இது நீ விந்து வெளியேற்றத்தை நாடமல் இருந்தால்தான் நிகழ முடியும். நீ விந்துவை வெளியேற்றத்த துடித்தால் அது ஒரு முக்கோண்மாகிவிட முடியும். ஏனேன்றால் , விந்து வெளியேறும் போது தொடர்பு நிலை மறைந்து விடுகிறது.

துவக்கத்திலேயே இரு . முடிவை நோக்கிச் செல்லாதே துவக்க நிலையிலேயே இருப்பது எப்படி? பல விஷயங்களை நீ நினைவில் கொள்ள வேண்டும்.

( தொடர்ச்சி அடுத்த பதிப்பில் )

ஓஷோ;- தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்

2 comments:

Anonymous said...

very excellent

ஆனந்த் நிருப் said...

thanks Mr.Ramesh , keep comming yr visits and comments are encouraging me

thank you